Thursday, May 16, 2024
Home » அண்ணாமலை புதுசா சுட்ட வடை ஆந்திராவின் திட்டமா, தெலங்கானாவின் திட்டமா என்று கூட தெரியாமல் உளறல் : மேடையிலேயே முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட சந்திரசேகர ராவின் மகள்

அண்ணாமலை புதுசா சுட்ட வடை ஆந்திராவின் திட்டமா, தெலங்கானாவின் திட்டமா என்று கூட தெரியாமல் உளறல் : மேடையிலேயே முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட சந்திரசேகர ராவின் மகள்

by MuthuKumar

சென்னை: அண்ணாமலை என்றாலே பொய் மட்டுமே பேசுவார் என்று நாளுக்கு நாள் அவரே உறுதிப்படுத்தி வருகிறார். தினமும் ஒரு பொய்யை சொல்லி மாட்டி கொள்ளும் அண்ணாமலை, சமீபத்தில் அண்ணா குறித்து சர்ச்சை, முதுகலை மருத்துவ படிப்பு சீட், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் விவரம் என அடுத்தடுத்து வாயில் வடை சுட்டு மாட்டி கொண்டார். அவர் பிறக்காத காலத்தில் நடந்த சம்பவங்கள் மற்றும் அவர் பார்க்காத சம்பவங்களை நேரில் நின்று பார்த்ததுபோல் ஒரு கதையை சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. தமிழ்நாடு குறித்தும், தலைவர்கள் குறித்தும் அண்ணாமலை அடித்துவிடும் பொய்க்கு ஆதாரங்கள் வெளிவந்தால் கப்சிப் என ஆகிவிடுவார். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், அதுக்கு விளக்கமளிக்காமல் ஒரே கேள்வியை அந்த நிருபரிடமே ரிப்பீட் மோடில் கேட்டு அவர்தான் புத்திசாலி என்று நினைத்து கொள்வார். ஆனால் நேற்று முன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை மிகப்பெரிய பொய்யை சொன்னார். அதற்கு மேடையிலேயே அவரது முகத்திரை கிழிக்கப்பட்டதால் வாய் ஜோக் கொடுத்தவர் கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்தார்.

இந்தியாவில் வருகிற 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்ற தலைப்பில் சென்னையில் நேற்று முன்தினம் ஒரு விவாத மேடை நிகழ்ச்சி நடந்தது. இந்த விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, தெலங்கானா மாநில எம்எல்சியும், அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகளுமான கவிதா ஆகியோர் பங்கேற்றனர். இதில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ‘இன்றைக்கு வாரிசு அரசியல் அதிகரித்து விட்டது. பெற்ேறார் பின்புலமாக கொண்டு வாரிசாக பிள்ளைகள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சியாக உள்ளனர். ஆனால் நான் மிகவும் படிப்பறிவு குறைவாக உள்ள பெற்றோருக்கு மகனாக பிறந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். தெலங்கானா மாநிலத்தில் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. தெலங்கானாவில் போலவரம் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அதில் முதல்வரின் குடும்பம் கொள்ளையடித்துள்ளது’ என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து கவிதா, அண்ணாமலையிடம் சரமாரியான கேள்விகளால் திக்குமுக்காட வைத்தார். கவிதா பேசியதாவது: தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை உண்மையா? இல்லையா?. தெலங்கானாவுக்கு எந்த ஒரு சிறப்பு திட்டமும் வரவில்லை உண்மையா? இல்லையா?. கார்ப்பரேட் நிறுவனங்களின் ₹12 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தீர்கள்?. ஆனால், 10 ஆண்டுகளில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லையே ஏன்?. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் எனது தந்தையின் ஆட்சியில் தெலங்கானாவின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதே அதற்கு சான்றாகும். 2024 தேர்தலில் பாஜகவுக்கு தென் மாநிலத்தில் ஒரு இடம் கூட கிடைக்காது. தெலங்கானாவில் கேசிஆர் செய்த வளர்ச்சி திட்டங்களை பாஜக 100 ஆண்டுகள் ஆனாலும் செய்யமுடியாது. போலவரம் திட்டம் தெலங்கானாவில் இல்லை. ஆந்திராவில் செயல்படுத்தப்படுகிறது. எந்த மாநிலத்தில் எந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பது கூட தெரியாமல் பேசுகிறீர்கள்.

பாஜக எதற்ெகடுத்தாலும் குடும்ப ஆட்சி என கூறுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஜெய்ஷா இருக்கிறார். அவர் கிரிக்கெட் வீரரும் கிடையாது. ஒரு கட்சியின் தலைவர். அமித்ஷா மகன் தான் அந்த பதவியில் இருக்கிறார். ஆந்திர பிரதேச மாநில பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி என்.டி.ராமாராவ் மகள் தானே. அது உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா?. ஜோதிராதித்ய சிந்தியாவை பாஜக எப்படி மத்திய அமைச்சராக்கியது?. தமிழகத்தில் திமுகவுடனும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனும் கூட்டணி வைத்தபோது அவை குடும்ப கட்சிகள் என்பது உங்களுக்கு தெரியாதா?. உங்களுக்கு தேவைப்பட்டால் வாரிசு அரசியலை விமர்சிப்பீங்க?. உங்களுக்கு வசதிப்பட்டால் வாரிசு அரசியலை ஏற்று கொள்வீர்களா?.
இவ்வாறு, அவர் பேசினார்.

அண்ணாமலைக்கு கவிதா பதிலடி ெகாடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi