மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி மீது அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, அமலாக்கத்துறை அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில், பலார்ட் எஸ்டேட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று அவர் நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக விளக்கம் பெறப்பட்டது. இதனை அமலாக்கத்துறை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டது.