திருமலை: மறைந்த முன்னாள் முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகர் நினைவு தினத்தையொட்டி கடப்பா அடுத்த இடுபுலபாயவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆந்திர முதல்வர் ெஜகன்மோகன் அஞ்சலி செலுத்தினார். மேலும், மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், இடுபுலபாயவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரின் 14வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி ராஜசேகரின் மகனும், ஆந்திர மாநில முதல்வருமான ஓய்.எஸ்.ெஜகன்மோகன், அவரது மனைவி ஒய்.எஸ்.பாரதி, தாயார் ஒய்.எஸ்.விஜயம்மா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ராஜசேகரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நினைவிடத்தில் உள்ள சிலைக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.