Saturday, May 18, 2024
Home » ஆந்திராவில் பயங்கரம் பட்டபகலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை

ஆந்திராவில் பயங்கரம் பட்டபகலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை

by Lakshmipathi

*பர்தா அணிந்த மர்ம நபர்கள் துணிகரம்

திருமலை : ஆந்திராவில் பட்டபகலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம், கடப்பா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் வியாபாரி சீனிவாசுலு. இவர் அரசு போக்குவரத்து கழக தலைவர் மல்லிகார்ஜுனாவுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சீனிவாசுலு வழக்கம்போல் கடப்பாவில் உள்ள ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி முடித்து கொண்டு வீட்டிற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது சந்தியா சந்திப்பு அருகே வந்த போது பர்தா அணிந்து வந்த மர்ம நபர்கள் சீனிவாசுலுவின் பைக்கை நிறுத்தியுள்ளனர்.

இதனால் செய்வதறியாமல் தவித்த சீனிவாசுலு அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் பட்டபகலில் சீனிவாசுலுவை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். பின்னர், மர்ம நபர்கள் ்அங்கிருந்து தப்பி சென்றனர்.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சீனிவாசுலுவை மீட்டு கடப்பா ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டபகலில் ரியல் எஸ்டேட் வியாபாரியை ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

seventeen − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi