அமராவதி: ஆந்திர மாநிலம் தேவாரப்பள்ளி நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமந்துள்ளனர். விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் சாலையின் எதிர் திசையில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.