பீகார்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் புறப்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் இருந்து அமித்ஷாவுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் வானில் பறக்க முயன்றபோது லேசாக தடுமாற்றம் அடைந்தது. தரையில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது தூரம் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. விமானிகள் உடனடியாக ஹெலிகாப்டரை இயல்புநிலைக்கு கொண்டு வந்ததை அடுத்து மீண்டும் பறந்து சென்றது.