சென்னை: ஐக்கிய அரபு அமீரக துபாய் அல் நாதா பகுதியில் உள்ள துபாய் ஸ்காலர்ஸ் பிரைவேட் பள்ளியில், அமீரக தமிழ் சங்கம் சார்பில், சங்க தலைவி டாக்டர் ஷீலா தலைமையில் பிரமாண்ட பொங்கல் விழா கொண்டாட்டம் நடந்தது. ஆர்.ஜே.மாயா தொகுத்து வழங்கினார். கவுரவ விருந்தினராக தமிழ்நாட்டில் இருந்து நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி பிரியங்கா, நடிகர் பாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக மனநல ஆலோசகர் பஜிலா ஆசாத், ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், ஈமான் அஸ்கர், சேக், டி.இ.பி.ஏ.பால் பிரபாகர், சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் பகவதி ரவி, கமால் கே.வி.எல், கார்ல் மார்க்ஸ், ஏ2பி ராஜு, நஜீம் மரிக்கா, துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ், பாளையங்கோட்டை ரமேஷ், எமிரேட்ஸ் நியான் உஸ்மான் அலி, எல்லா தமிழ் கூத்தாநல்லூர் தாஹிர், தொழிலாதிபர் பிரபகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பார்வையாளர்களாக டிக்டாக் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.