Wednesday, May 22, 2024
Home » அமெரிக்க இளைஞர்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம்.. இந்திய சிறுவர்கள் ஸ்பைடர்மேனாக ஹாலோவீன் கொண்டாட்டம் : பிரதமர் மோடி பேச்சு!!

அமெரிக்க இளைஞர்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம்.. இந்திய சிறுவர்கள் ஸ்பைடர்மேனாக ஹாலோவீன் கொண்டாட்டம் : பிரதமர் மோடி பேச்சு!!

by Porselvi

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க நேரப்படி நேற்றிரவு அதிபர் ஜோபிடன் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். இந்த விருந்து நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி, ஆனந்த் மகிந்தரா ஆகியோர் பங்கேற்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் சிஇஒக்கள் விருந்தில் கலந்து கொண்டனர். கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை, சத்ய நாதெல்லா, இந்திரா நூயி மற்றும் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம், குக் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி பேசியதாகவது,” பேஸ்பால் மீதான காதலுக்கு மத்தியில், அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டும் பிரபலமாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற அமெரிக்க அணி தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும் இந்தியர்கள்- அமெரிக்கர்கள் ஒருவரை ஒருவரை சிறந்த முறையில் அறிந்து கொள்கிறார்கள். இந்தியா, அமெரிக்கா இடையே கலாசார பரிமாற்றம் உள்ளது; இந்திய குழந்தைகள் ஸ்பைடர்மேன் ஆடை அணிந்து ஹாலோவீன் கொண்டாடுகின்றனர். அமெரிக்க இளைஞர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீண்ட தூரம் பயணித்து அமெரிக்காவின் மரியாதைக்குறிய இடத்தை பிடித்துள்ளனர். அமெரிக்காவின் சமூகம் மற்றும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதில் இந்திய அமெரிக்கர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளனர். குவாட் மாநாட்டின்போது ஜப்பானில் சந்தித்தபோது, நீங்கள் சந்திக்கும் பிரச்சினை பற்றி தெரிவித்தீர்கள். அந்த பிரச்சினையை நீங்கள் தீர்த்து இருப்பீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதேபோல் முதன் பெண்மணி ஜில் பைடனுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய வருகையில் கவனம் செலுத்தி, பயணம் வெற்றிபெற முக்கிய பங்கு வகித்தார்கள். நேற்று (இந்திய நேரப்படி நேற்றுமுன்தினம்) எனக்காக நீங்கள் வெள்ளை மாளிகை கதவை திறந்தீர்கள்” என்றார்.

You may also like

Leave a Comment

4 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi