சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் விழா நாள் கொண்டாடப்படவுள்ளது. அன்றையை தினம் காலை 10 மணிக்கு சென்னை ஆற்காடு சாலையிலுள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு அதிமுக சார்பில் தலைமை கழக செயலாளர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.