புதுடெல்லி: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி அமைப்பின் இயக்குனராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி அலோக் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியை சிறப்புப் பாதுகாப்புக் குழு(எஸ்பிஜி) மேற்கொண்டு வருகிறது. இதன் தலைவராக இருந்த அருண்குமார் சின்ஹா கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி காலமானார். இதையடுத்து எஸ்பிஜியின் புதிய இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி அலோக் சர்மா நேற்று நியமிக்கப்பட்டார். 1991ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அலோக் சர்மா, தற்போது எஸ்பிஜியில் கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.