டெல்லி: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக தடையில்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்றவர்கள் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர் நியமனத்துக்கான அறிவிப்பை வெளியிட்ட உத்தரவை எதிர்த்த வழக்கு தொடரப்பட்டது. கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எவராக இருந்தாலும் அர்ச்சகராகலாம் என தனிநீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.