Saturday, May 18, 2024
Home » அடிக்கடி மது வாங்கி கொடுத்து தந்தையை வீட்டில் மட்டையாக்கி 21 வயது மகளுடன் 47 வயது காதலன் உல்லாசம் : திடீரென போதை தெளிந்து பார்த்ததால் அடித்துக்கொலை; விசாரணையில் திடுக் தகவல்கள்

அடிக்கடி மது வாங்கி கொடுத்து தந்தையை வீட்டில் மட்டையாக்கி 21 வயது மகளுடன் 47 வயது காதலன் உல்லாசம் : திடீரென போதை தெளிந்து பார்த்ததால் அடித்துக்கொலை; விசாரணையில் திடுக் தகவல்கள்

by Karthik Yash

நாகர்கோவில்: தந்தைக்கு அடிக்கடி மது வாங்கி கொடுத்து மட்டையாக்கி 21 வயது மகளுடன் 47 வயது நண்பன் உல்லாசமாக இருந்து உள்ளார். திடீரென போதை தெளிந்துபோது இருவரும் உல்லாசமாக இருந்ததை கண்டு தந்தை அதிர்ச்சியடைந்தார். இதை தட்டிக்கேட்டபோது தந்தையை அடித்து கொன்று நாடகமாடிய மகள் மற்றும் காதலன் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள கடுக்கரை ஆலடி காலனியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (46). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். சுரேஷ் குமாருக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இளைய மகள் தனது தாயாருடன் சென்று விட்டார். மூத்த மகள் ஆர்த்தி (21) தந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் 25ம் தேதி குடிபோதையில் வீட்டு திண்ணையில் சுரேஷ்குமார் படுத்திருந்ததாகவும், மறுநாள் பார்த்த போது இறந்து கிடந்ததாகவும் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் ஆர்த்தி புகார் கொடுத்தார்.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுரேஷ் குமார் தலையின் முன் பக்கம் கம்பால் பலமாக தாக்கியதால் அவர் இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆர்த்தியிடம் விசாரித்தனர். அப்போது, தனது தந்தை தகாத வார்த்தைகள் பேசியதால், ஆத்திரத்தில் தள்ளி விட்டேன். ஆனாலும் அவர் திட்டியதால், அடித்து கொன்றேன் என்று வாக்கு மூலம் கொடுத்து இருந்தார். இதையடுத்து பூதப்பாண்டி போலீசார் ஆர்த்தியை கைது செய்தனர். இருப்பினும் இந்த கொலையை ஆர்த்தியால் மட்டுமே செய்திருக்க முடியாது என்று போலீசார் சந்தேகித்தனர். இதனால் ஆர்த்தியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, சுரேஷ்குமாரின் நண்பரான வெல்டிங் பட்டறை வைத்துள்ள வாட்ஸ்புரத்தை சேர்ந்த சுரேஷ் பாபு (47) என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சுரேஷ் பாபு (47) சுரேஷ்குமாரின் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம். அப்போது ஆர்த்தியுடன் நெருங்கி பழகிய சுரேஷ் பாபு, நீண்ட நேரம் செல்போனிலும் பேசி வந்து உள்ளார். ஆர்த்தியின் தந்தை சுரேஷ்குமாரும், சுரேஷ்பாபுவும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவார்கள். சுரேஷ் குமார் மதுபோதையில் சரிந்த பிறகு ஆர்த்தியுடன் சுரேஷ்பாபு உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 25ம் தேதி ஆர்த்தியின் வீட்டுக்கு வந்த சுரேஷ் பாபு, அங்கிருந்த ஆர்த்தியின் தந்தை சுரேஷ் குமாருடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளார்.

பின்னர் சுரேஷ் குமார் மதுபோதையில் உறங்கிய நிலையில், வழக்கம் போல் ஆர்த்தியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென போதை தெளிந்து கண் விழித்த சுரேஷ் குமார், தனது மகளுடன் சுரேஷ்பாபு உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், சுரேஷ் பாபுவிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் சுரேஷ் பாபு அங்கிருந்த கம்பை எடுத்து சுரேஷ் குமாரின் தலையில் அடித்துள்ளார். இதில் சுரேஷ்குமார் சுருண்டு விழுந்து பலியானார். இதையடுத்து சுரேஷ் பாபுவை போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

* போலீஸ் ஏட்டுகளுக்கு தொடர்பு
இந்த கொலை வழக்கில் கைதான ஆர்த்தியின் செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஆண் நண்பர்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றுள்ளது. இந்த லிஸ்ட்டில் உள்ள பலர், மதுபாட்டில்கள் வாங்கி சென்று சுரேஷ் குமாருக்கு கொடுத்து விட்டு, பின்னர் ஆர்த்திக்கும் தந்து, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு ஆர்த்தியை செல்போன் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டவர்கள் பட்டியலில் குமரியில் உள்ள 2 போலீஸ் ஏட்டுக்களும் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்துள்ளது. ஆர்த்திக்கு வெளியே செல்லும் போது பிரச்னை ஏற்பட்டால், அதனையும் மேற்கண்ட 2 ஏட்டுக்களும் தீர்த்து வைத்து உள்ளனர். தற்போது, இந்த கொலை வழக்கையும் அவர்கள் நீர்த்து போக முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட காவல்துறை கருப்பு ஆடுகள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* கொலையாளி 4வது திருமணம் செய்ய முயற்சி
கொலை செய்த சுரேஷ் பாபுவுக்கு ஏற்கனவே 3 பேருடன் திருமணம் ஆகியுள்ளது. சுரேஷ் குமாரை கொலை செய்த பின்னர், ஆர்த்தியிடம், இந்த கொலையை நீ ஒப்புக் கொண்டால், உன்னை நான் ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விடுவேன். அதன் பின்னர், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறியுள்ளார். ஆர்த்தியும், தனது தந்தை சுரேஷ் குமார் இறந்து விட்டதால், அனாதையான தனக்கு ஆதரவு வேண்டும் என்பதால், சுரேஷ் குமாரை கொலை செய்ததாக பொய் வாக்குமூலம் அளித்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

13 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi