Thursday, May 9, 2024
Home » ஆலப்புழா அருகே இரட்டைக் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை: கடன் தொல்லையால் விபரீத முடிவு

ஆலப்புழா அருகே இரட்டைக் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை: கடன் தொல்லையால் விபரீத முடிவு

by Karthik Yash

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தலவடி என்ற பகுதியை சேர்ந்தவர் சுனு (33). இவரது மனைவி சவும்யா (30). கணவன்-மனைவி 2 பேரும் கூலித் தொழில் செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஆதி, ஆதில் என்ற 2 மகன்கள் இருந்தனர். அவர்கள் 2 பேரும் 3 வயதான இரட்டைக்குழந்தைகள். சுனு, சவும்யா தம்பதிக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை அவர்களது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது குழந்தைகள் 2 பேரும் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்தனர். சுனுவும், சவும்யாவும் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களையும் கைப்பற்றி னர். இரட்டைக் குழந்தைகள் 2 பேருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்த பிறகு கணவன், மனைவி 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi