டெல்லி: அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநர் ராவீந்திர குமார் கடிதம் அனுப்பியுள்ளார். விமானத்தில் பயணி தகாத முறையில் நடந்தால் அதை கையாளுவது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பொறுப்பு. தவறு செய்யும் நபர்களுக்கு பறக்கத் தடை விதிக்கப்படும் காலஅளவை நிறுவனத்தின் உள் குழு தீர்மானிக்கும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.