சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை தொடங்கியது. கூட்டணி முறிவு அல்லது கூட்டணியை தொடர பாஜகவுக்கு நிபந்தனை விதிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அண்ணா பற்றி அண்ணாமலை பேசியதால் ஏற்பட்ட சர்ச்சை ஒரு வாரத்துக்கு மேலாக நீடிக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். அதிமுக 2-ம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டும் என்று வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.