சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாட்சியப் பதிவு குறித்த அறிக்கையை வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகைபாலன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு எதிராக பழனிசாமி மான நஷ்டஈடு கோரி வழக்கு, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பிப்.1 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.