சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக பழனிசாமி கூறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஜன.23-ம் தேதி ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.