மதுரை: அதிமுக வேட்பாளர் சரவணன் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை எம்.பி. நிதி ரூ.17 கோடி ஒதுக்கீடு இருந்தும் ரூ.5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என சரவணன் அவதூறு பரப்பியுள்ளார். உண்மையில் ரூ.17 கோடியில் 245 திட்டங்கள், ரூ.16.96 கோடி கிட்டத்தட்ட 100% பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.