சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் நிலைப்பாடுகள் குறித்து தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூகம் தொடர்பு ஊடகங்களில் எடுத்துரைப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் நாகப்பட்டினம் மாவட்டம், பஞ்சநதிக்குளம், நடுச்சேத்தி அஞ்சல், வேதாரண்யம் காசிநாதபாரதி இன்று முதல் இணைத்துக் கொள்ளப்படுகிறார். தொலைக்காட்சிகள் மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்கள் காசிநாதபாரதி பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.