தஞ்சை: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தஞ்சையில் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக மீண்டும் இணையாதா என்று மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ஜெயலலிதா ஆன்மாவின் எண்ணமாக இருக்கும் என்று தெரிவித்தார்.