பெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏவாக 2001 முதல் 2006ம் ஆண்டு வரை இருந்தவர் ஏ.கே.எஸ்.அன்பழகன்(54). இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக குடும்பத்தினர் வந்தவாசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏவுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது தந்தை ஏ.கே.சீனிவாசன் முன்னாள் எம்எல்ஏவாக இருந்துள்ளனர். முன்னாள் எம்எல்ஏ இறந்த செய்தி கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடலுக்கு அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை பெரணமல்லூர் சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.