சென்னை: வானகரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். சென்னை வானகரம் ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வர்த்தக அணி செயலாளர் செல்லபாண்டியன் வரவேற்றார். இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு கல்வி சலுகைககள் வழங்கப்பட்டது.
சிறுபான்மை மக்களுக்கு உண்மையான பாதுகாப்பு தரும் இயக்கம் அதிமுக’’ என்றார். புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பேராயர்கள் ஸ்டேன்லி செபஸ்டியான், எட்வின் யேசுராசா, ஜோசப் பாலச்சந்திரன், ராபின் ராஜ்குமார், தேவ கடாட்சம், அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்து கொண்டனர்.