மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசை கண்டித்து செல்லூர் ராஜு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேசியதாக செல்லூர் ராஜு மீது புகார் எழுந்தது. அரசு வழக்கறிஞர் பழனிசாமி தொடந்த வழக்கில் செல்லூர் ராஜு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.