சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஜனவரி 2-ம் தேதி கரூரில் அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமிக்கு எதிராக கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி 11 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.