சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உட்பட 6 பேருக்கு எதிரான வழக்கை விசாரித்து 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. 2019-ல் தொழிலதிபரை மிரட்டி பட்டாசு ஆலையை ராஜவர்மன் நண்பரின் மனைவி பெயரில் கிரையம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. சிவகாசி நகர காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துமாரியப்பன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளனர்.