சென்னை: அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்துத் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் ஒத்திவைத்தார். பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய உரிமை உள்ளது என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.