சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிகவுடன் அதிமுக நிர்வாகிகள் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா இல்லத்தில் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.