நாமக்கல்: செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி பகுதி சேர்ந்த முனுசாமி (37) தனியார் துணி கம்பெனியில் வேலை செய்து வருகின்றார் இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்திருந்தார். எப்போது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் 1300 படிக்கட்டுகள் இறங்கி சென்று குளித்த போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், தீயணைப்பு துறை ஊழியர்கள் உதவியுடன் அங்கேயே முதல் உதவி சிகிச்சை அளித்து, அவரை மரத்தினால் படுக்கை அமைத்து மேலே கொண்டு கொண்டு வந்து செம்மேடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது