மதுரை: அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கில் விரிவான நிலை அறிக்கையை ஜன.5-க்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அப்சல் நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு விசாரணையை சிறப்பு விசாரணை பிரிவுக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது.