சென்னை: அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அடையார் ஆற்றங்கரையில் புதிதாக 4 பூங்காக்கள், 16 கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் தமிழ்நாட்டில் முதன்மை நதிகள் புனரமைப்பிற்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பூவிருந்தவல்லியில் 150 ஏக்கரில் புதிய திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.