Saturday, April 27, 2024
Home » நூல்கோலின் நன்மைகள்!

நூல்கோலின் நன்மைகள்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

நூல்கோல் மண்ணுக்குள் விளையும் காய் வகையாகும். நூக்கல், நூற்கோல் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. நூல்கோலில் கலோரிகள் மிகமிகக் குறைவு. ஆனால் மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் மிக அதிகம். நூல்கோலில் வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும் மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. நூல்கோல் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் எலும்பை உறுதியாக்கவும் பயன்படும்.

செரிமானத்தைத் தூண்டும். நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது.பருவ கால மாற்றங்கள் ஏற்படும் போது முதலில் நம்மை பாதிப்பது மூச்சு தொடர்பான பிரச்னைகள்தான். குறிப்பாக, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் இந்த பனிக் காலத்தில் கூடுதலாக ஏற்படும். இந்த நுரையீரலில் தேங்கும் சளி போன்ற பிரச்னைகளுக்கு நூல்கோல் மிக நல்ல தீர்வைக் கொடுக்கும். நூல்கோலின் மேலுள்ள தண்டும் அதன் மேலுள்ள கீரையிலும் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகின்றது.

நூல்கோல் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று. இதில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும். உடல் கழிவுகளை வெளியேற்றி, எடையைக் குறைக்கவும் உதவுகிறது. குறைந்த கலோரி கொண்ட இந்த நூல்கோல் வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதோடு பெருங்குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

சருமத்தில் உள்ள தோல் பகுதிகள், சுருக்கம், கோடுகள் இருப்பவர்கள் உணவில் அதிகமாக நூல்கோலை சேர்க்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதய சம்பந்த பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இந்த நூல்கோலை உணவில் அடிக்கடி சேர்த்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்தை
ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இதன் இலையில் அதிக அளவில் ஃபோலேட் சத்தும் உள்ளதால் இதயத்தைபாதுகாக்கும்.உடல் எடையைக் குறைக்க உதவும். புற்றுநோய்கட்டிகள் உருவாவதை தடுக்கும்.உடலில் உள்ள வீக்கங்கள், வலிகளைக் குறைக்கும் ஆற்றல் உடையது. ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: எஸ்.மாரிமுத்து

You may also like

Leave a Comment

two × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi