புதுடெல்லி: பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நேற்று தன் வீட்டில் தேசிய கொடி ஏற்றி வைத்தார். நாடு முழுவதும் நேற்று 75வது குடியரசு தினம் மிகவும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி வைத்தனர். பாஜவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி(96) வயது மூப்பு காரணமாக அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்கிறார். ஆனால் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அவர் தன் வீட்டில் தேசிய கொடி ஏற்றி வைத்து வருகிறார். 75வது குடியரசு தினத்தையொட்டி அத்வானி தன் வீட்டில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.