சென்னை : பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்வோம் என்று திமுக தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் எண்ணத்தோடு பொன்முடி மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் பொன்முடி நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.வழக்கு தொடரப்பட்டபோது பொன்முடியிடம் வருமானத்துக்கு அதிகமாக வெறும் ரூ.4.8 லட்சம் மட்டுமே இருந்ததாக புகார் கூறப்பட்டது,”என்றார்.