Monday, May 20, 2024
Home » ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கருணை அடிப்படையில் 34 வாரிசுதாரர்களுக்கு பணி: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆணையை வழங்கினார்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கருணை அடிப்படையில் 34 வாரிசுதாரர்களுக்கு பணி: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆணையை வழங்கினார்

by Karthik Yash

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் 34 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடந்தது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ மூலம் இந்த மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள், பழங்குடியினர் நல திட்ட அலுவலர்கள் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர்கள் ஆகியோருடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாவட்ட வாரியான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரிந்து பணியிடையே காலமான 34 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கான நியமன ஆணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வழங்கினார். அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் பயன் விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் பணி புரிந்திடுமாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா மற்றும் ஆதிதிராவிடர் நல இயக்குநர் ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

11 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi