செய்யூர்: புதுப்பிக்கப்பட்ட இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலக கட்டிடத்தினை காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் ஆகியோர் திறந்து வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ள இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் அலுவலக கல்வெட்டு ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் குணசேகர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் இனியரசு, பேரூர் செயலாளர் மோகன்தாஸ், துணை செயலாளர் ரஞ்சித்குமார், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் பாரத், மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, கடப்பாக்கம் பகுதியில் பேரூர் செயலாளர் மோகன்தாஸ் தலைமையில், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடைக்கழிநாடு பேரூர் திமுக சார்பில், பூத் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பாஸ்கர் சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு கலைஞரின் நூற்றாண்டு விழா, திமுக பவளவிழா ஆண்டை முன்னிட்டு, 1 கோடி புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்ப்பது குறித்தும், வாக்கு சாவடி முகவர்களில் செயல்பாடுகள் மற்றும் ஆக்கப்பணிகள் குறித்து பேசினர். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலிக், பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, சித்தாமூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் சிற்றரசு தலைமையில் பூத் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் குளத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்கள் செயல்பாடு குறித்து உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் ஆலோசனை வழங்கினார். இதில், ஒன்றிய நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.