திருவள்ளூர்: திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நடுவர் பவித்ரா முன்பு ஆஜரான நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு நிறைவு பெற்றது. சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் இரண்டரை மணி நேரமாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. நேற்று விசாரணை நடத்தி விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை போலீஸ் பதிவு செய்தது. திருமணம் செய்து தன்னை ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தன்னுடன் சீமான் மாலை மாற்றி திருமணம் செய்ததாக விஜயலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார்.