சென்னை : நடிகை விஜய லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2011ம் ஆண்டு தன் மீது பதியப்பட்ட வழக்கை, ரத்து செய்ய வேண்டும் என சீமான் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. புகாரை திரும்ப பெறுவதாக விஜய லட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கை முடித்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின் அரசியல் காரணங்களுக்காக விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.