சென்னை: நடிகையும் முன்னாள் எம்.பி.யு,மான ஜெயப்பிரதாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை. நடிகை ஜெயப்பிரதா மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் வழக்கு தொடர்ந்தது.