டெல்லி: பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து நடிகர் பவன் கல்யானின் ஜனசேனா கட்சி விலகுவதாக அறிவித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியை ஆதரிப்பதற்காக விலகியதாக பவன் கல்யான் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி பாஜக உடன் கூட்டணி அமைத்து இயங்கி வருகிறார். இவர் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவளிக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் கடந்த மாதம் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து பவன் கல்யாண் விலகியுள்ளார்.
தெலுங்கு தேசம் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள நிலையில் அவர்களுக்கு ஜனசேனா இளைஞர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே தெலுங்கு தேசமும், ஜனசேனாவும் இணைந்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி மூழ்கிவிடும் என்று கூறியுள்ளார்.