சென்னை : ஏ.ஐ.சி.டி.இ. உறுப்பினர் செயலாளர் ராஜீவ்குமார் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பெயரில், கல்வி நிறுவனங்களை சிலர் தொடர்பு கொண்டு, கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை சாதகமாக செய்து தருவதாக தெரிவித்துள்ளனர். அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், எந்த ஒரு கல்வி நிறுவனத்திற்கும் அழைப்பு விடுக்கவில்லை. இதுபோன்ற முறைகேடுகளான அழைப்பு வந்தால், கல்வி நிறுவனங்கள் தங்களின் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.