செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே அதிமுக செயலாளர் சுப்பிரமணியம் வீட்டில் 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சுப்பிரமணியம் வீட்டில் ஒரு கிலோ வெள்ளியும் கொள்ளைபோனது. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.