ஆலந்தூர்: ஆதம்பாக்கம், லாயிட்ஸ் அவென்யூவில் நேற்று மாலை ரூ.24 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் புதிய இறகுபந்து விளையாட்டு திடல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்பி ஆர்.எஸ்.பாரதி, கவுன்சிலர் ரேணுகா சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, புதிய ரேஷன் கடை கட்டிடத்துக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். பின்னர் விளையாட்டு திடலை திறந்து வைத்து, இறகுபந்து விளையாடினார். இதில் ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், மண்டல உதவி செயற்பொறியாளர்கள் ரவிராஜன், சபாபதி, நிர்வாகிகள் கோல்டு பிரகாஷ், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜெ.நடராஜன், கலாநிதி குணாளன், கோடீஸ்வரன், தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.