Friday, June 14, 2024
Home » சக பயணிகள் முன் விமானத்திற்குள் மலம் கழித்த போதை ஆசாமி

சக பயணிகள் முன் விமானத்திற்குள் மலம் கழித்த போதை ஆசாமி

by Dhanush Kumar

புதுடெல்லி: விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது போதை ஆசாமி விமானத்திற்குள் சக பயணிகள் முன்னிலையில் மலம் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24ம் தேதி மும்பையில் இருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது மது போதையில் இருந்த பயணி ஒருவர், திடீரென விமானத்தின் உள்ளே சக பயணிகள் முன்னிலையில் கீழே உட்கார்ந்து மலம் மற்றும் சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் சக பயணிகளை முகம் சுளிக்கச்செய்தது. இதனை பார்த்த விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை கடுமையாக எச்சரித்தனர். இதனை தொடர்ந்து விமான நிறுவன அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் விமானம் டெல்லியில் தரையிறங்கியவுடன் சம்பந்தப்பட்ட பயணி ராம் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

sixteen − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi