சென்னை: சென்னை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு தலைவர் அன்சாரிக்கு மிரட்டல் விடுத்த ஜெகதீசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெகதீசன் மற்றும் 6 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வண்ணாரப்பேட்டையில் சாலையோரம் வியாபாரம் செய்யும் பெண்ணிடம் மாமூல் கேட்டதாக கடந்த டிசம்பரில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.