சென்னை: காலை 5.30 மணி முதல் 7 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டால் கூடுதல் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பும் பணி நடந்து வருகிறது என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.