கடலூர்: கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் தொகுதியில் மொத்தம் 1509 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வாக்குப்பதிவு நாளன்று பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசார் உள்பட 3800 பேர் ஈடுபடவுள்ளனர்.