தாம்பரம்: தமிழ்நாடு முழுவதும் வரும் 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த, தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி அனைத்து அலுவலகங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், திரையரங்குகளில் பகல் காட்சி ரத்து செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி வரும் ஏப்ரல் 19ம்தேதி வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படும் என பூங்கா நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.