தர்மபுரி, ஏப்.14: தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் நேற்று பட்டுக்கூடு விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தர்மபுரி மாவட்ட பட்டுக்கூடு அங்காடியில், தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் மஞ்சள் மற்றும் வெண் பட்டுக்கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். தர்மபுரி அங்காடியில் நல்ல விலை கிடைப்பதால் தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பட்டுக்கூடுகளை தர்மபுரிக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே பட்டுக்கூடுகளின் தரத்தை பொறுத்து விலை சற்று குறைவாக ஏலம் போனது. கடந்த 12ம் தேதி ஒரு கிலோ வெண் பட்டுக்கூடு அதிகபட்சமாக ₹501க்கு ஏலம் போனது. நேற்று ஒரு கிலோ வெண் பட்டுக்கூடு அதிகபட்சம் ₹538 ஆக உயர்ந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடு விலை உயர்வு
previous post