தர்மபுரி, ஏப்.14: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் சிந்தல்பாடி -தர்மபுரி ரோட்டில் உள்ள பங்கில் டூவீலருக்கு பெட்ரோல் அடித்து விட்டு, பி.பள்ளிப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு டூவீலர் மோதியது. இதில், வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த குமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி
previous post