கிருஷ்ணகிரி, ஏப்.14: கெலமங்கலம் அடுத்த சி.தம்மாண்டரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரகுராம் (33). இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 10ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது மனைவி நித்யா, கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.